புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச.10-ல் 200 இடங்களில் போராட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு, விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் டிச.10-ம் தேதி மாநிலம் தழுவிய வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், குன்றாண்டார்கோவில் பகுதியில் நேற்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

அங்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் கூறியபோது ‘‘மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச.10-ம் தேதி 200 இடங்களில் சாலையில் செல்லும் வாக னங்களை 10 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை நகரில் சுமார் 30 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE