சரக்கு லாரி மோதிய விபத்தில் விவசாயிகள் 2 பேர் உயிரிழப்பு :

பொங்கலூர் அருகே சரக்கு லாரி மோதிய விபத்தில் விவசாயிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

பொங்கலூர் அருகே வலைய பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி (71), சின்னக்காட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் (48). விவசாயிகளான இருவரும் பொங்கலூரில்சாலையோரம் நேற்று நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உடுமலையிலிருந்து காங்கயம்நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி, இவர்கள் மீதுமோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலின் பேரில், அவிநாசி பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள், சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்து தொடர்பாகஅவிநாசிபாளையம் போலீஸார்வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்