மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,500 கனஅடியானது :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 13-ம் தேதி அணை நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் அதே அளவு தொடர்ந்த நிலையில், மாலை 4 மணியளவில் 10,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்