காட்டுப்பள்ளி துறைமுக எல்லையில் நுழைந்த 4 இலங்கை மீனவர்கள் கைது :

அவ்விசாரணையில், இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்கான்(21), முகமது காலீம்(50), முகமது ஹைய்தர்(42), முகமது ரியால்(19) ஆகிய 4 மீனவர்கள் எவ்வித அரசு ஆணையும் இன்றி சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து, காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் நுழைந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, பிடிப்பட்ட 4 பேரை, விசைப்படகுடன் காட்டூர் போலீஸாரிடம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காட்டூர் போலீஸார், அவர்கள் நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்