வீரபாண்டி அருகே விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :

வீரபாண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சேலம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் கிழக்கு காட்டு வளவைச் சேர்ந்தவர் விவசாயி சந்தோசம் (42). இவர் தனது மனைவி லலிதாவுடன் (40) இருசக்கர வாகனத்தில் ஆட்டையாம்பட்டிக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார். வீரபாண்டி அருகே அரியானூர்- ஆட்டையாம்பட்டி சாலையில் இவர்கள் சென்றபோது, எதிரே வீரபாண்டி ராஜவீதியைச் சேர்ந்த தர் (25) என்பவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சந்தோசம் உயிரிழந்தார். படுகாயமடைந்த லலிதா சீரகா பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தர் உயிரிழந்தார். இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தநிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்