கிருஷ்ணகிரியில் நாளை முதல் - அஞ்சல் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை :

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ளஅனைத்து அஞ்சல் அலுவலகங் களிலும் நாளை முதல் தங்கப்பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நாளை (29-ம் தேதி) முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் நான்காயிரம் கிராம் வரை வாங்கலாம்.

தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். இதன் இறுதி தேதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்புக்கு தங்கப்பத் தரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான் எண், வங்கிக்கணக்கு ஆகியவை மிகவும் அவசியம்.

தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெறலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கப்பத்திரத் திட்டத்தில் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்