மதுரை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல் லூரி முன்னாள் மாணவர் சங்கம், நகரப் பண்பாட்டுக் கழகம் ஆகியவை சார்பில் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா, பொறியாளர் வி.நாகஜோதி எழுதிய ‘நமக்கு தெரிந்த வாசகங்கள், தெரியாத விளக்கங்கள் ’ நூல் அறிமுக விழா நடந்தது.
முதல்வர் கி.வேணுகா தலைமை வகித்தார். நகரப் பண்பாட்டுக் கழகப் பொருளாளர் சாவித்திரி பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் கல்லூரி முதல்வர் சின்னப்பா நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். நாகஜோதி ஏற் புரையாற்றினார். உதவி பேராசிரியை பூங்கோதை நன்றி கூறினார். உதவி பேராசிரியை இந்துராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.