தென்னிந்திய பல்கலை.க்கு இடையிலான இறகுப்பந்து போட்டி : பரமக்குடி கல்லூரி மாணவர் தேர்வு

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுகக்கு இடையிலான இறகுப்பந்து போட்டிக்கு பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் கேஜிஎப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான, தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே இறகுப்பந்து போட்டி டிசம்பர் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான அழகப்பா பல்கலைக்கழக அணி வீரர்கள் தேர்வு போட்டியில் பல்வேறு கல்லூரி அணிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மாணவர் கோபி கிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டார். அவரை உடற்கல்வி இயக்குநர் பிரசாத், துறைத் தலைவர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE