மதுரை கோட்டத்தில் ரயில்கள் ரத்து :

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு; நெல்லை, தூத்துக்குடி பகுதியில் பெய்த மழையால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் (வண்டி எண் 06667) தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய (வண்டி எண் 16235) தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய (வண்டி எண் 12694) தூத்துக்குடி-சென்னை முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை தூத்துக்குடி - மீளவிட்டான் (7.67 கி.மீ) ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மீளவிட்டான் ரயில் நிலையத் திலிருந்து இயக்கப்பட்டது என, மதுரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE