சம்பா சாகுபடிக்கு பயிர்க் கடன் வழங்காததை கண்டித்து - ஆட்சியர் முன் தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் :

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிக ளுக்கு சம்பா சாகுபடிக்கு வழங்க வேண்டிய பயிர்க் கடன் இதுவரை வழங்காததைக் கண்டித்து, தஞ்சாவூர் ஆட்சியர் முன்பு முக்காடுபோட்டு அமர்ந்து விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயி கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திருவோ ணம் வட்டார விவசாயிகள் நலச் சங்க செயலாளர் வி.கே.சின்னதுரை உள்ளிட்ட விவசாயிகள், ஊரணி புரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையின் கீழ், 27 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், திருவோணம் ஒன்றியம் ராஜாளிவிடுதி, வெட்டுக்கோட்டை, தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, பூவாளூர் உள்ளிட்ட பல சங்கங்களில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்க் கடன் கேட்டு 3 மாதங்கள் அலைந்தும் இதுவரை கடன் வழங்காததைக் கண்டித்தும், கடன் வழங்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆட்சி யர் முன்பு தரையில் அமர்ந்து தலை யில் முக்காடிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பயிர்க் கடன் வழங் காத பகுதிகளை கணக்கெடுத்து சிறப்பு முகாம் நடத்தி கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக ஆட்சி யர் உறுதியளித்தார். எனினும், விவசாயிகள் நலச் சங்க செய லாளர் சின்னதுரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய் தனர்.

முன்னதாக, தமிழக விவசாயி கள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மத்திய, மாநில அரசுகள் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500, கரும்பு டன் ஒன் றுக்கு ரூ.4,000 விலை அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங் களில் விவசாயம் பாதிக்காத வகையில் யூரியா, பொட்டாஷ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உர சாக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத் தில், தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

டெல்டாவில் சிங்சல்பேட் உரத் தட்டுபாடு உள்ளது. இதை தவிர்க்க அரசு சார்பில் ஏக்கருக்கு 10 கிலோ உரம் வழங்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண் டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இருவரும் இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வந்தனர். அதேபோல, மத்திய குழு வினரும் இரவில் வந்து ஆய்வு செய்தனர். இதுஒரு கண்துடைப்பு நடவடிக்கை போல உள்ளது.

தமிழக அரசு பயிர் சேதங் களுக்கு அறிவித்துள்ள நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறியாக உள்ளது. இதை மாற்றி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்