போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது :

கோவில்பட்டி: கழுகுமலை கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்தி ரன் மகன் கார்த்திக் (24). இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி, குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தார்.

கயத்தாறு அருகே இலந்தபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிக் குமார்(26). இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நலக்குழும எண்ணுக்கு வந்த புகாரை தொடர்ந்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் குருலட்சுமி விசாரணை நடத்தினார். இதில், சிறுமியுடன் திருமணம் நடந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் போக்ஸோ சட்டத்தில் மாரிக்குமாரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE