7 வயது சிறுமி இறப்பில் சந்தேகம் :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (43). லாரி ஓட்டுநர். இவரது மனைவி தேன்மொழி, மகள்கள் கனிஷ்கா (11) மேகா (7). சுரேஷ்குமார் பணி நிமித்தமாக பெங்களூரு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் தேன்மொழி சேர்த்தார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய சிறுமிக்கு இரவு 11.30 மணியளவில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, அதிகாலை 12.15 மணிக்கு இறந்துவிட்டார். மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, சுரேஷ்குமார் வாடிப்பட்டி போலீஸில் புகார் கொடுத் தார். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேதப் பரி சோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE