பட்டா மாறுதல் சிறப்பு முகாம் :

காங்கயம் வட்டம் நத்தக் காடையூர் உள்வட்டம், கீரனூர் மற்றும் மரவாபாளையம் கிராமங்களுக்கு நடைபெற்ற கணினி பட்டா பிழைதிருத்தம் சிறப்பு முகாமில் மொத்தம் 39 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் பொ.சுகுமாரன் தலைமை வகித்தார். காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமி முன்னிலைவகித்தார். கீரனூர், மரவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மாறுதல் மற்றும் பட்டாவில் பிழை திருத்தம் செய்து வழங்கப்பட்டது. மொத்தம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. காங்கயம் மண்டல துணை வட்டாட்சியர் மயில்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்