தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்த நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு அலுவலர் நியமனம் :

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சிகள் மற்றும்பேரூராட்சிகளில், அன்றாடபணிகளை மேற்பார்வை செய்வதற்காக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பொறுப்பு அலுவலர்களை, பொறுப்பு மாநகராட்சி ஆணையர் இரா. லட்சுமணன் நியமித்துள்ளார்.

இதையடுத்து பொறியாளர் பிரிவுக்கு பொறியாளர்கள் ஜி.ஆனந்த ஜோதி, பெட்சி ஞானலதா, நா.பிரபாகரன், பி.வெங்கிடேசன் ஆகியோரும், நகரமைப்பு பிரிவுக்கு நகரமைப்பு அலுவலர்கள் டி.அன்பு, எஸ்.பாஸ்கரன், எம்.தர், நகரமைப்பு ஆய்வாளர்களாக எல்.ஜெய்சங்கர், எஸ்.எஸ்.புவனேஸ்வர், சுரேஷ்,எம்.செல்லப்பாண்டி, கே.சங்கர்ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருவாய் பிரிவுக்குவருவாய் அலுவலர் எம்.கருமாரியப்பன், சுரேஷ் ஆகியோரும், வருவாய் ஆய்வாளர்களாக பி.செந்தில்குமரன், என்.சங்கரன், ராஜூ, ரவி, சந்துரு ஆகியோரும், பொது சுகாதார பிரிவுக்கு சுகாதார அலுவலர் சி.அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர்களாக பி.சிவக்குமார், எம்.காளிதாஸ், என். மாரிமுத்து, சுந்தர்ராஜன், என்.சிவக்குமார், நாகராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேரூராட்சி, நகராட்சிகளில் எந்த வளர்ச்சிப் பணியையும், கண்காணிப்பு அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் செய்யக் கூடாது எனஏற்கெனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE