கேரளாவுக்கு கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

குளச்சல் எஸ்.ஐ. சனல்குமார் தலைமையில் குளச்சல் மரமடி பகுதியில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கார் ஓட்டுநர் சிராயன்குழியை சேர்ந்த ஜெயசீலனை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை காரில் கேரளா வுக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.

காரில் இருந்த 1 டன் ரேஷன் அரிசி, 400 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்