காவல் நிலைய புதிய கட்டிடத்தை திறந்த முதல்வர் :

நாகப்பட்டினம்

நாகை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெளிப்பாளையம் காவல் நிலைய கட்டிடம், ஆயுதப்படை காவலர்களுக்கான 143 குடியிருப்புகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

இதையொட்டி, நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி கு.ஜவஹர் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி ராமு, டிஎஸ்பிக்கள் சரவணன், பழனிசாமி, சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராணி, தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE