போலீஸாருக்கான மருத்துவ முகாம் :

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் இந்திரா சர்க்கரை நோய் மையம் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த முகாமை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். காவல்துறையினர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டனர். சர்க்கரை நோய் குறித்து மருத்துவர் அருள்பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆலோசனை வழங்கினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்