குமரியில் 400 போலீஸார் பணியிட மாற்றம் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல் நிலையம் வாரியாக பணியாற்றி வரும் போலீஸார் 400 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டுகள், காவலர்கள் மற்றும் மகளிர் போலீஸார் மாற்றம் செய்ய்பபட்டுள்ளனர். நாகர்கோவில் வடசேரி, கோட்டாறு, நேசமணிநகர், ஆசாரிபள்ளம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவைச் சேர்ந்த போலீஸாரையும் இடமாற்றம் செய்து எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். ஒரே காவல் நிலையத்தில் இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை பிற காவல் நிலையங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE