ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை உட்பட 29 துறைகளைச் சேர்ந்த 80 பேரின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

மனுக்கள் தொடர்பாக துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர். 49 மனுக்கள் மீது முழுமையாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 31 மனுக்களுக்கு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் கமலநாதன், மாவட்ட கருவூல அலுவலர் காஜா நஜூமுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE