ஒட்டன்சத்திரம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் :

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் அருகே அரண் மனைபுதூர் கிராமத்தில் நள்ளிரவு பெய்த கன மழை காரணமாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதிக்குள் தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். குடகனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாடிக்கொம்பு அருகே உள்ள ஆத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. தரைப்பாலம் சேதமடைந்ததால் ஆத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட இடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE