கைதான இளைஞர் தப்பியோட்டம் :

By செய்திப்பிரிவு

ஏர்வாடி அருகே காட்டுப்பள்ளியில் மனநலம் பாதித்த 19 வயது பெண் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார்.

கீழக்கரை மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த சேக்உதுமான் (21) என்பவரை கைது செய்தனர். அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வதற்காக போலீஸார் முருகன், ராஜூ ஆகியோர் அழைத்துச் சென்றனர். முன்னதாக அவரை ராமநாத புரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அங்கிருந்து சேக்உதுமான் தப்பியோடினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE