நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்குரொக்கப் பரிசு ரூ.1,001 வழங்கப்படும்’ என பதி விட்டிருந்தார். இந்தப் பதிவு அமைதி மீறு தலை தூண்டும் வகையிலும், குற்றமுறு மிரட்டல் விடுத்த தாகவும் உள்ளது.

எனவே, இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடைவீதி போலீஸார் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோவை மாநகர காவல்துறை தெரிவித் துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE