500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாம், சுசீந்திரம் கற்காடு முகாம், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு பள்ளி, காப்பிக்காடு அருகே உள்ள குன்னத்தூர் அரசு பள்ளி, செண்பகராமன்புதூர் முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு எண்ணெய், மளிகை பொருட்கள், போர்வை, சேலை போன்றவை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. மலைவாழ் மக்கள் வசிக்கும் களியல் பகுதியில் 152 குடும்பங்கள், பேச்சிப்பாறை மோதிரமலை பகுதியைச் சேர்ந்த 53 குடும்பங்கள், சின்னமோதிரமலையைச் சேர்ந்த 30 குடும்பங்கள் உட்பட 500 குடும்பங்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்