நாகை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தல் :

சமூக விரோதிகளை அடையாளம் காண அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளின்போது, விபத்துகளை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய சமூக விரோதிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளின் நுழைவாயில்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் நுழைவாயில்கள் ஆகிய இடங்களில் சாலையை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE