கும்பகோணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை :

கும்பகோணம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் மகன் யோகேஸ்வரன்(21). பட்டதாரி யான இவர், தனது நண்பரான கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்த குரு பிரசாத் மகன் நந்தகுமார்(21) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவு சென்ற நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழி மறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் நேற்று அதி காலை இறந்தார். ஆபத்தான நிலையிலுள்ள நந்தகுமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE