நிவாரண நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ :

போளூர் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்த குடும்பத்துக்கு அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிவாரண உதவி வழங்கினார்.

போளூர் அடுத்த வெண்மணி ஊராட்சியில் மழையால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவியை அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மேலும் அவர், வெங்கோணம் பகுதியில் மழையால் பாதிக் கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதில், வட்டாட்சியர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன், யாசின், மாவட்ட துணை செயலாளர் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE