சிதம்பரத்தில் தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ ஆய்வு :

கடலூர் மாவட்டத்தில் 907 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கரோனா தடுப்பூசி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார மருத்துவ அலுவலர் மங்கை, மருத்துவ அலுவலர் தீபன் விஸ்வநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, மருத்துவர்கள் அமல், பவித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் குமார், முன்னாள் நகர அதிமுக செயலாளர் தோப்பு சுந்தர், பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அசோகன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்