நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு : மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிக்கிரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம். கூலித் தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் (17). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மாதவன் (21). இவரது மகள் மாளவிகா (21). இவர்கள் இரண்டு பேரும் இரட்டையர்கள். இந்த நிலையில் நேற்று மாலை லோகேஸ்வரன், மாதவன், மாளவிகா ஆகிய 3 பேரும் அதே பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். 3 பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். கரையில் இருந்து இதை பார்த்தவர்கள் இதுகுறித்து நெல்லிக்குப் பம் போலீஸார் மற்றும் தீயணைப் புத் துறையினருக்கு தகவல் அளித் தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரையும் தேடும்பணியில் ஈடுபட்டனர். இதில் லோகேஸ்வரன், மாளவிகா ஆகிய இருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. 2 பேரின் உடலை யும் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மாதவனை தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்