வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள் திருட்டு :

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள், ரூ.2.65 லட்சம் ரொக்கம் திருடு போயின.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் சொக்கலிங்கம் மகன் மணிகண்டன்(29), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில், மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, யாரோ வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, இவரது அறையை வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு, மற்றொரு அறையில் பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.2.65 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது நேற்று காலை தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்