பல்கலை.யில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் முறைகேடு: ஒருவர் கைது :

இதை நம்பிய சக்திவேலு, 2017 ஜூலை 1-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் வைத்து, ரூ. 5.90 லட்சத்தை இருவரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் பல்கலைக்கழகத்தில் சக்திவேலுவின் மகனுக்கு வேலை வாங்கித் தருவது குறித்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றுவது தெரிய வந்தது. இது தொடர்பாக சக்திவேல் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கரை போலீஸார் கைது செய்தனர். பல்கலை. அலுவலரான பார்த்தசாரதியை தேடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE