நாகரசம்பட்டி அருகே வீரமலையில் 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அருகே 600 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீஸார், ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு, வீரமலை பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்ஐ சந்துரு மற்றும் போலீஸார், வீரமலை நகர் இந்திரா நகருக்கு அருகே சின்னப்பையன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் சோதனை செய்தனர்.

அங்கு 600 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, சின்னப்பையன் (45), அதே பகுதியைச் சேர்ந்த மணி (22), அவரது மனைவி சங்கீதா (20) உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், சின்னப்பையனை கைது செய்த போலீஸார் தப்பியோடிய மணி, சங்கீதாவை தேடி வருகின்றனர். மேலும், சாராய ஊறல், சாராயம் ஆகியவற்றை அழித்த போலீஸார். இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்