தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு :

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடே சன், புதுச்சேரிக்கு வருகை தந்தார்.அவர் நேற்று புதுச்சேரி சட்டப்பேர வையில் உள்ள முதல்வர் அலுவ லகத்தில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுச்சேரியில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம், தூய்மைப் பணியாளர் களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டு மெனகோரிக்கை விடுத்தார். அது தொடர்பான மனுவையும் முதல்வரிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரியாங்குப்பம் தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்