கீரப்பாளையத்தில் செவிலியர் தற்கொலை :

புவனகிரி அருகே உள்ள கீரப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேவிலட்சுமி (36). இவர்களுக்கு திவாகரன் என்ற 8 வயது மகன் உள்ளார். தேவிலட்சுமி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தற் காலிக செவிலியராக பணியாற்றி வந்தார். வீட்டில் தனியாக இருந்த தேவிலட்சுமி நேற்று தூக்குப்பேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரமாக வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது தேவி லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த புவனகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்