திண்டிவனம் அருகே - பெண் குழந்தையை கடத்த முயற்சி : வடமாநில இளைஞர் மீது சரமாரி தாக்கு

திண்டிவனம் அருகே குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளை ஞரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டிவனம் அடுத்த சேடன் குட்டைத் தெருவில் வசித்து வரும்ஆனந்த் மற்றும் சூர்யா தம்பதியி னருக்கு 3 வயதில் அஸ்வினி எனும்பெண் குழந்தை உள்ளது. நேற்றுஅஸ்வினி வீட்டுக்கு அருகாமை யில் விளையாடி கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையை திடீரென்று தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து கடுமையாக தாக்கி யார் என்று விசாரித்துள்ளனர்.எதுவும் கூறாததால் உடனடியாக திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரிடம் ஒப்ப டைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண் டனர்.

விசாரணையில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராகுல் என்பதும் அவர் இந்த பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரிவதும் தெரிய வந்தது. அவரைதிண்டிவனம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சையளித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்