புதுக்கடை காவல் நிலைய எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட் தலைமை யில் போலீஸார் முஞ்சிறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற பைங்குளத்தை சேர்ந்த சுபாஷ்(34), காப்புக்காட்டை சேர்ந்த கண்ணதாசன்(39) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 190 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago