சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த காங்கயம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கயம்சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக காங்கயம்நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 5-க்கும்மேற்பட்ட வார்டுகளில் மக்களுக்குநன்றி தெரிவித்து, பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வெள்ளகோவில் பகுதியில், 34 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். இதேபோல, குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஆறத்தொழுவு ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 42 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வினீத், சார்-ஆட்சியர் ஆனந்த்மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago