தேசிய அளவிலான போட்டிகள் நிறைவு :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில்,காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள ஈபிஈடி கல்லூரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன.

கைப்பந்து, கூடைப்பந்து, கபாடி, வாள் சண்டை, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஸ்கேட்டிங், கால்பந்து, பந்து வீசுதல், சிலம்பம்,தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளை பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் செயலர் ஆர்.அஜித்குமார் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்