ஜோதிஸ் பியூர் மரச்செக்கு எண்ணெய் : 5 லிட்டர் வாங்கினால் 1 கிலோ வெல்லம் இலவசம் :

கோவை: ஜோதிஸ் பியூர் மரச்செக்கு எண்ணெய் ஆலையின் சொந்த தயாரிப்பில் நல்லெண்ணெய், நிலக் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய், வலிநிவாரண எண்ணெய், தீபம் எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

தேன், நெய், வெல்லம், பனை சர்க்கரை, பனைவெல்லம், மசாலா, உப்பு, நட்ஸ் ஆகியவையும், நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சுத்தமாக தயாரிக்கப்படும் கரும்பு சர்க்கரையும் இங்கு கிடைக்கிறது. நீங்கள் வாங்கும் பொருட்களின் தொகைக்கேற்ப ‘லாயல்டி பாயின்ட்’ வழங்கப்படுகிறது. இந்த பாயின்டை பயன்படுத்தி பொருளாகவோ, பரிசாகவோ வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். நேரடியாக வர முடியாதவர்களுக்கு கோவை முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, உரிமையாளர் ஜெர்ரி மற்றும் ரீனா கூறுகையில், “புதிய அறிமுகமாக கரிசலாங்கண்ணி கற்றாழை, மருதாணி, பன்னீர் ரோஸ் உட்பட 48 மூலிகைகளைக் கொண்டு ஆயுர்வேத ஹேர் ஆயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் இந்த எண்ணெய் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆயுர்வேதிக் எண்ணெய் மூலம் பொடுகு, வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் நீங்கி, ஆரோக்கியமான கூந்தல் பெறலாம். தீபாவளி சிறப்பு சலுகையாக 5 லிட்டர் எண்ணெய் வாங்கினால் 1 கிலோ வெல்லமும், 3 லிட்டர் வாங்கினால் அரை கிலோ வெல்லமும் இலவசமாக அளிக்கப்படுகிறது” என்றனர். கூடுதல் விவரங்களுக்கு 90425 50055 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்