தேன்கனிக்கோட்டையில் - 50 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு :

குற்றங்களை தடுக்க தேன்கனிக்கோட்டையில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டையில் கோட்டை சந்திப்பு சாலையில் இருந்து அஞ்செட்டி சாலை வரை 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை டிஐஜி மகேஸ்வரி தொடங்கி வைத்தார். பின்னர் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை மற்றும் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தை பார்வையிட்டு டிஐஜி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து போக்குவரத்து வசதியில்லாத மலைக் கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மருத்துவர் சுப்பிரமணி ஆகியோரின் சேவையை பாராட்டி கேடயம் வழங்கினார்.

இந்நிகழ்வில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்