தருமபுரியில் அரசு இசைப்பள்ளி தொடங்க : கிராமிய நாடகக் கலைஞர்கள் வலியுறுத்தல் :

தருமபுரி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சங்க கூட்டம் அரூரில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க நிர்வாகி பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

கூட்டத்தில், ‘தருமபுரி மாவட்டத்துக்கு தனியாக கலை பண்பாட்டுத் துறை அலுவலகம் அமைக்க வேண்டும். கிராமிய கலைஞர்களின் குறைகள்,கோரிக்கைகள், தேவைகள் குறித்து அறியும் வகையில் கலை பண்பாட்டுத் துறை அலுவலர்கள் மாதம் ஒருமுறை கிராமிய கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயது வரம்பை 50 ஆக குறைக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளி தொடங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் கணேசன், தேவராஜ், தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்