பிஆர்டிசி பேருந்து எரிந்து சேதம் :

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே பிஆர்டிசி பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த சுத்துகேணி செல்லும் அரசு பேருந்தின் முன்பகுதி நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பின்னர் உருளையன்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE