அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன் மறைவு :

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன் காலமானார்

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தந்தையுமான செ. முருகேசன் காலமானார்.

இவர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவராகவும், ராம்கோ கூட்டுறவு தலைவராகவும் இருந்து வந்தார். சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் முருகேசன் (67) காலமானார்.

அதிமுக நிர்வாகிகளும், பல்வேறு தரப்பினரும் முருகேசனின் உடலுக்கு மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் இன்று காலை 9 மணியளவில் வண்டிக்காரத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்