ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி வனப்பகுதியில் பெய்யும் மழையை பொருத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது. ஒகேனக்கல்லில் கடந்த 28-ம் தேதி மாலை நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் மாலை 18 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் 14 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.