கிருஷ்ணகிரியில் மாணவியருக்கான : மாநில அளவிலான கோ-கோ போட்டி தொடக்கம் :

போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். போட்டியை டிஎஸ்பி சரவணன், முன்னாள் நகராட்சி தலைவர் பரிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், போட்டியில் வெற்றி பெறும் அணிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE