தேன்கனிக்கோட்டை அருகே பேருந்தில் : ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது :

தேன்கனிக்கோட்டை வட்டம் நாட்றாம்பாளையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் உன்சனஅள்ளிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அஞ்செட்டி போலீஸாருக்கு நேற்று தகவல் வந்தது. இதைதொடர்ந்து, அஞ்செட்டி காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், சேசுராஜபுரத்தை அடுத்த சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி பாப்பம்மா (40) என்பவர் 9 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE