மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவியரசன்(10). இவர் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டுக்கு செல்லும் மின்சார வயருக்கு முட்டுக்கொடுத்திருந்த இரும்பு கம்பியை பிடித்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE