சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி :

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் மானிடவியல் துறை சார்பில்ஒருவார ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியர் என்.ராமபிரான் ரஞ்சித்சிங் சிறப்புரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வரலாறு, இந்தியக் குடிமகனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

தேசிய மாணவர் படைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநெல்வேலி, பெண்கள் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி மேஜர் ஆர்.மஞ்சு பேசினார். ஏற்பாடுகளை துறைத் தலைவர் எம்.ஏ.நீலகண்டன் செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE