சிவகங்கையில் காஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம் :

சிவகங்கை அருகே இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது வீட்டில் நேற்று பிற்பகல் சமையல் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டருடன் பொருத்தினார். அப்போது திடீரென எரிவாயு வெளியேறி தீப்பிடித்தது. சிலிண்டர் வெடித்ததில் தங்கராஜ், அவரது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுவின் மகள் காருண்யா (1) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்