சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி தி.கோடு காவல் நிலையத்தில் ஆய்வு :

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்ட மூன்று காவல் நிலையங்களில் திருச்செங்கோடு நகர காவல் நிலையமும் ஒன்று. இதையடுத்து மண்டலங்களுக்குள் தேர்வு செய்யப் பட்ட காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யும் பணி மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவர் (ஐ.ஜி) தினகரன் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள நூல் நிலையம், வரவேற்பு அறை, தலைமை எழுத்தர் அறை, கணினி அறை, காவலர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஐஜி தினகரன் ஆய்வு மேற்கொண்டார். வழக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங் களையும் ஐஜி தினகரன் கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்ல பாண்டியன், திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE