காட்பாடி பகுதிகளில் 28-ம் தேதி மின் தடை :

காட்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 28-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, காட்பாடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘காட்பாடி நகருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கு வதற்காக காட்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தி யாவசிய மின் சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால், வரும் 28-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காந்திநகர், செங் குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந் தாங்கல், கழிஞ்சூர், சேனூர், வஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிகுப்பம், கன்சாலூர், வடுகன்குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத் தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்